செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு

Published On 2020-08-19 02:22 GMT   |   Update On 2020-08-19 02:22 GMT
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் நாளை ஆய்வு செய்கிறார்.
வேலூர்:

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார்.

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின் விவசாயிகள், தொழில்துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை செய்கிறார்.

கோவை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்துள்ள நிலையில் நாளை வேலூர் மாவட்டம் செல்கிறார்.
Tags:    

Similar News