செய்திகள்
கோப்பு படம்.

ஆற்காடு அருகே புதுப்பெண் மயங்கி விழுந்து பலி- போலீசார் விசாரணை

Published On 2020-08-19 06:57 GMT   |   Update On 2020-08-19 06:57 GMT
ஆற்காடு அருகே திருமணமான 13 நாளில் புதுப்பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆற்காடு:

ஆற்காடு அருகே பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சினியோன் (வயது 37). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி (30). இவர்களுக்கு கடந்த 5-ந் தேதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சினியோன், கனிமொழி ஆகியோர் நேற்று முன்தினம் அரப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு மறுவீடு சென்றனர். அப்போது கனிமொழி வீட்டின் அருகே மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கனிமொழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News