செய்திகள்
கோப்புபடம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

Published On 2020-09-25 09:51 GMT   |   Update On 2020-09-25 09:51 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட துணை தாசில்தார் காவேரி கலெக்டர் அலுவலகத்தில் ஐ பிரிவு தலைமை உதவியாளராகவும், சதீஷ் வந்தவாசி மண்டல துணை தாசில்தாராகவும், ஸ்ரீதேவி செய்யாறு மண்டல துணை தாசில்தாராகவும், கோமதி சேத்துப்பட்டு தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதேபோல் வந்தவாசி மண்டல துணை தாசில்தார் அகத்தீஸ்வரன் வந்தவாசி தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், செய்யாறு மண்டல துணை தாசில்தாராகவும் செய்யாறு தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், சேத்துப்பட்டு மண்டல துணை தாசில்தார் மஞ்சுநாதன் திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் மண்டல துணை தாசில்தாராகவும் உள்பட 29 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News