செய்திகள்
காவிரி

டெல்லியில் 9-ம் தேதி கூடுகிறது காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம்

Published On 2020-10-03 17:54 GMT   |   Update On 2020-10-03 17:54 GMT
மாதத்திற்கு ஒருமுறை கூடும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் வருகிற 9-ம்தேதி டெல்லியில் நடக்கிறது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினர் மாதந்தோறும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். செப்டம்பரில் நடந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உபரிநீரை திறந்து கர்நாடகா கணக்கு காட்டியுள்ளதாக தமிழக அதிகாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் வருகிற 9-ம்தேதி டெல்லியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்க தமிழக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். நடப்பு ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 2.44 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு நிலுவை வைத்துள்ளது. இம்மாதம் 20.2 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும்.
Tags:    

Similar News