செய்திகள்
கொரோனா தொற்று பரிசோதனை

கோவையில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 4 பேர் பலி

Published On 2020-12-11 02:23 GMT   |   Update On 2020-12-11 02:23 GMT
கோவை மாவட்டத்தில் நேற்று 124 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவை:

கோவையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வேகமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 150-க்குள் உள்ளது. இந்த நிலையில் நேற்று சுகாதார துறை வெளியிட்ட பட்டியல்படி கோவை மாவட்டத்தில் நேற்று 124 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 80 ஆக உயர்ந்து உள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது, 70 வயது முதியவர்கள், 58 வயது ஆண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது ஆண் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கோவை யில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 86 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
Tags:    

Similar News