செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

சென்னையில் 148 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2021-01-29 15:02 GMT   |   Update On 2021-01-29 15:02 GMT
தமிழகத்தில் இன்று 509 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ்  பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 37 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 531 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 4
செங்கல்பட்டு - 48
சென்னை - 148
கோவை - 57
கடலூர் - 10
தர்மபுரி - 2
திண்டுக்கல் - 2
ஈரோடு - 20
கள்ளக்குறிச்சி - 3
காஞ்சிபுரம் - 14
கன்னியாகுமரி - 10
கரூர் - 8
கிருஷ்ணகிரி - 9
மதுரை - 9
நாகை - 8
நாமக்கல் - 6
நீலகிரி - 12
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 6
ராமநாதபுரம் - 0
ராணிப்பேட்டை - 3
சேலம் - 21
சிவகங்கை - 2
தென்காசி - 1
தஞ்சாவூர் - 7
தேனி - 1
திருப்பத்தூர் - 1
திருவள்ளூர் - 28
திருவண்ணாமலை - 2
திருவாரூர் - 2
தூத்துக்குடி - 2
திருநெல்வேலி - 8
திருப்பூர் - 21
திருச்சி - 9
வேலூர் - 18
விழுப்புரம் - 1
விருதுநகர் - 3

உள்நாட்டு விமானநிலையம் - 2

மொத்தம் - 509
Tags:    

Similar News