செய்திகள்
புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-06-30 07:54 GMT   |   Update On 2021-06-30 08:10 GMT
புதுச்சேரியில் கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 9 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.



ஊரடங்கில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நள்ளிரவுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இதையடுத்து கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி கடற்கரை சாலை, பூங்கா ஆகியவை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சிக்காக திறந்திருக்கும். கோவில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும். உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படும்.

Tags:    

Similar News