செய்திகள்
கைது

கோவையில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Published On 2021-06-30 09:57 GMT   |   Update On 2021-06-30 09:57 GMT
கோவையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தியது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை:

கோவை போத்தனூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

ஆட்டோவில் 1¼ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ஆட்டோவை ஓட்டி வந்த போத்தனூர் ஸ்ரீனிவாசாநகரை சேர்ந்த விஜயகுமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவரிடம் இருந்து ஆட்டோ, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News