செய்திகள்
கோப்புபடம்

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2021-07-02 12:57 GMT   |   Update On 2021-07-02 12:57 GMT
தாமரைக்குளம் அருகே ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். விவசாயிகளின் வாழ்க்கை சிறக்கவும், இரட்டிப்பு லாபம் கிடைக்கவும் ஏரிகளிலும், குளங்களிலும் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளித்து, முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும். விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கான விதிகள் எளிமையாக்கப்பட வேண்டும். வண்டல் மண் எடுப்பதால் விவசாய நிலங்கள் செழுமை அடையும். ஏரிகளிலும், குளங்களிலும் அதிக அளவு நீரை சேமிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பெருகும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பரமசிவம், செழியன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News