செய்திகள்
கைதான இளமாறன்.

மனைவியை கொன்ற வாலிபர் சிறையில் அடைப்பு

Published On 2021-07-25 08:21 GMT   |   Update On 2021-07-25 08:21 GMT
ஆத்திரமடைந்த இளமாறன் மனைவியை தாக்கினார். இதனால் உடலில் பல்வேறு இடங்களில் சரிதாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்துள்ளார்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியை சேர்ந்தவர் இளமாறன் (வயது 30). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி சரிதா (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த இளமாறன் மனைவியை தாக்கினார். இதனால் உடலில் பல்வேறு இடங்களில் சரிதாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு சரிதாவின் உடல் நிலை மோசமானதால் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு இளமாறன் அழைத்து சென்றார்.

அங்கு சரிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் விரைந்து வந்து சரிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சரிதாவின் உறவினர் ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இளமாறனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சின்னக்கரை பகுதியில் இளமாறன் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பதுங்கியிருந்த இளமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News