செய்திகள்
கோப்புபடம்

வன விலங்கு வார விழா போட்டி - மாணவர்கள் படைப்புகளை அனுப்பலாம்

Published On 2021-10-01 09:47 GMT   |   Update On 2021-10-01 09:47 GMT
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது.
உடுமலை:

ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் வன விலங்கு வார விழாவை முன்னிட்டு ‘காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள், மக்களையும், புவியையும் நிலை நிறுத்துதல்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டிகள் நடக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது. படைப்புகளை நாளை 2- ந்தேதிக்குள், www.2020atrtpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 63692 69722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News