செய்திகள்
தற்கொலை

ஆரல்வாய்மொழி அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

Published On 2021-10-26 10:05 GMT   |   Update On 2021-10-26 10:05 GMT
ஆரல்வாய்மொழி அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியை அடுத்த சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். கூலி தொழிலாளி.

ஜெயராஜின் மனைவி இன்பகனி (வயது 25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தையும், 4 மாத கைக்குழந்தையும் உள்ளது. கடந்த சில நாட்களாக இன்பகனி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார்.

சம்பவத்தன்று ஜெயராஜ் பொருட்கள் வாங்க வெளியே சென்றார். திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

உடனே அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு இன்பகனி தூக்கு போட்டு தற்கொலை செய்திருந்தார். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News