செய்திகள்
கோப்புபடம்

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி

Published On 2021-10-30 04:19 GMT   |   Update On 2021-10-30 04:19 GMT
3 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற 10ந்தேதி பரிசு வழங்கப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர்:

கடந்த 26-ந்தேதி முதல் வருகிற 1-ந்தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு வார உறுதிமொழி ஏற்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ‘சுதந்திர இந்தியா@75 : நேர்மையுடனான தற்சார்பு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கட்டுரை போட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடந்தது. இதில் 50 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று கட்டுரை எழுதினர்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் செய்திருந்தனர். மாணவர்கள் எழுதிய கட்டுரை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பின் அதிலிருந்து சிறந்த 3 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற 10ந்தேதி பரிசு வழங்கப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News