செய்திகள்
கைது

ஆம்பூர் அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது

Published On 2021-10-30 10:24 GMT   |   Update On 2021-10-30 10:24 GMT
ஆம்பூர் அருகே மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 17 வயதில் மகள் உள்ளார்.

வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 21) என்பவர் கடந்த 25-ந் தேதி மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக பெண்ணின் தாய் உமராபாத் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை பாண்டியனை மைனர் பெண்ணுடன் வடசேரி கூட்டு ரோட்டில் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் பெண்ணை கடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News