செய்திகள்
கோப்புப்படம்

பொள்ளாச்சி அருகே மாணவி கற்பழிப்பு: கைதான 5 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2021-11-01 05:59 GMT   |   Update On 2021-11-01 05:59 GMT
பொள்ளாச்சி அருகே 15 வயது மாணவி கற்பழிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைதான 5 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான 17 வயது சிறுவன் ஏற்கனவே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மகரஜோதி (31) என்பவர் சிறுமியிடம் பழகினார். பின்னர் திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை அவர் பலாத்காரம் செய்தார்.

இந்த விவரத்தை மகரஜோதி தனது நண்பர்களான முத்து முருகன் (19), பிரவின்குமார் (19), ஜெயபிரகாஷ் (10), நாகராஜ் (19) ஆகியோரிடம் தெரிவித்தார். இதனை கேட்ட மகரஜோதியின் நண்பர்கள் 4 பேரும் சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

இதற்கிடையே சிறுமியை அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் காதலித்தார். அந்த சிறுவனும் மாணவியை கற்பழித்தார்.

இந்தநிலையில் மாணவி கர்ப்பம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்கள் மகளை சீரழித்த 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அந்த 6 பேர் மீதும் வழக்குப்பதிவு அவர்களை கைது செய்தனர்.

பள்ளி மாணவியை மிரட்டி கற்பழித்தவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு செல்வநாயகம், டி.எஸ்.பி. தமிழ்மணி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து மாணவியை பலாத்காரம் செய்த மகரஜோதி, நாகராஜ், முத்துமுருகன், ஜெயபிரகாஷ், பிரவின்குமார் ஆகிய 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான 17 வயது சிறுவன் ஏற்கனவே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News