செய்திகள்
கைது

திருக்காட்டுப்பள்ளியில் மதுவிற்றவர் கைது

Published On 2021-11-03 23:55 GMT   |   Update On 2021-11-03 23:55 GMT
திருக்காட்டுப்பள்ளியில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளியில் மதுவிற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இ்தையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது திருக்காட்டுப்பள்ளி அண்ணாசிலை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மதுவிற்ற விஷ்ணம்பேட்டை சுப்பிரமணியன் (வயது48) என்பவரை திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News