உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே மினி லாரி மோதி 30 ஆடுகள் பலி
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி நிற்காமல் ஆடுகளின் மீது மோதியது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கொரக்கவாடி கிராம சாலையில் கொரக்கவாடி நோக்கி ராமநாதபுரம் மாவட்டம் அரியாங்குடியைச் சேர்ந்த முருகேசன் (45), இன்று காலை 5 மணி அளவில் செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்றார். அப்போது பின்னால் மினி லாரி வந்தது.
இதனை காட்டுக்கொட்டகை,கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (28) ஓட்டி வந்தார். திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி நிற்காமல் ஆடுகளின் மீது மோதியதில் 30 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தது.
இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.