உள்ளூர் செய்திகள்

5 தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி

Published On 2023-05-02 07:50 GMT   |   Update On 2023-05-02 07:50 GMT
  • 5 தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, ராம் நகர் அண்ணாசிலையருகில் நிறைவடைந்தது.

ஓசூர்,

ஓசூரில், மே தினத்தை முன்னிட்டு, தனியார் தொழிற்சாலைகளின், 5 தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக ஓசூர் தாலுகா அலுவலகம் அருகில் இருந்து பேரணி தொடங்கியது. இதனை, தொழிற்சங்க நிர்வாகி ராதா தொடங்கிவைத்தார். இந்த பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, ராம் நகர் அண்ணாசிலையருகில் நிறைவடைந்தது.

பின்னர், அங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு, முனியப்பன் தலைமை தாங்கினார். பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சந்திரசேகர், சக்திவேல், காளிங்கன், மாதேஷ், வனவேந்தன், குமணன் ஆகியோர் பேசினர். முடிவில், பாபு நன்றி கூறினார்.

Tags:    

Similar News