உள்ளூர் செய்திகள் (District)

தியாகதுருகம் அருகே விஷ பூச்சி கடித்து மாற்றுத்திறனாளி பெண் சாவு

Published On 2023-11-05 07:27 GMT   |   Update On 2023-11-05 07:27 GMT
  • எனவே அதே பகுதியில் தனது தம்பி சங்கருடன் வசித்து வந்தார்.
  • சைகை மூலம் விஷ பூச்சி கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே மடம் காட்டுக்கொட்டாய் பகுதி யைச் சேர்ந்தவர் நடேசன்.இவரது மகள் தெய்வானை (வயது 53) மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆக வில்லை. எனவே அதே பகுதியில் தனது தம்பி சங்கருடன் வசித்து வந்தார். இந்நிலை யில் சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக மடம் ஏரிக்கரை பாதையில் சென்றார். அப்போது அவரை விஷ பூச்சி கடித்த தாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டுக்கு வந்த அவர் வீட்டில் இருந்த வர்களிடம் சைகை மூலம் விஷ பூச்சி கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனைப் புரிந்து கொண்ட உறவி னர்கள் அவரை கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வானை நேற்று காலை இறந்து போனார். இது குறித்து அவரது தம்பி சங்கர் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News