உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
- மணிகண்டன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
- மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் பில்லாலி தொட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவருக்கு நித்யா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் இன்று காலை தனது வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.