தமிழ்நாடு (Tamil Nadu)

கார்-லாரி மோதி நகைக்கடை உரிமையாளர் பலி

Published On 2024-09-13 10:45 GMT   |   Update On 2024-09-17 11:02 GMT
  • இருவருக்கும் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

சேலம் மாவட்டம் செல்வ நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது54). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

இவரது நண்பரான சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த அங்குஸ் (39) என்பவருடன் காரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டனர். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காரில் ஊர் திரும்பினர். காரை சேலம் மாவட்டம் சின்னநாயக்கர்பட்டி பகுதியைச் சேர்ந்த சான்பாட்சா (36) ஓட்டிவந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக வந்து கொண்டிருந்தபோது சேத்தூரை அடுத்த கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அசையாமணி விலக்கு அருகே கார் திடீரென எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் பயணித்த செல்வம், அங்குஸ், டிரைவர் சான்பாட்சா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரித்தனர். மற்ற இருவருக்கும் முதலுதவிஅளித்து மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News