உள்ளூர் செய்திகள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

Published On 2024-09-15 06:55 GMT   |   Update On 2024-09-15 06:55 GMT
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.
  • தமிழ்நாடாக தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் பேரறிஞர் அண்ணா.

சென்னை:

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது.

இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணாசிலை அலங்கரித்து வைக் கப்பட்டிருந்தது. சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ப.ரங்கநாதன், ஜோசப்சாமுவேல், பரந்தாமன், தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதன் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து உருவப்படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.

இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மயிலை வேலு, ஜெ.கருணா நிதி எம்.எல்.ஏ., எழிலன், மோகன், ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா எம்.எல்.ஏ. பூச்சிமுருகன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.

அண்ணா அறிவாலய கட்டிடத்தின் மேலே அமைக்கப்பட்டிருந்த 75-ம் ஆண்டு தி.மு.க. பவளவிழா இலட்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


இதேபோல் அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 75-வது ஆண்டு தி.மு.க. பவள விழா இலட்சினையை திறந்து வைத்து கொடியேற்றினார். இதில் இளைஞரணி மாநில நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

75 ஆண்டுகளாக தி.மு.க. இந்த சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!

தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் "அண்ணா… அண்ணா…" என்றே பேசினார், எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்.

ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News