உள்ளூர் செய்திகள்
மேட்டுக்கடை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
ஈரோடு- மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு- மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சாணார் பாளையம், மேட்டுக்கடை, நத்தக்காட்டு பாளையம், புங்கம்பாடி, அரவிளக்கு மேட்டுப்பாளையம், சாலைப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.