உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் , திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு ஆகிய வட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.