உள்ளூர் செய்திகள்

பல்லாவரம், அடையார், போரூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2024-06-12 06:45 GMT   |   Update On 2024-06-12 06:45 GMT
  • அடையார் 4-வது மெயின் ரோடு, கைலாஷ், கஸ்தூரிபாய் நகர் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
  • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணிக்கு மேற்கு தாம்பரம் முல்லைநகரில் நடக்கிறது.

மின் பராமரிப்பு காரணமாக நாளை (13-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பல்லாவரம் தர்காரோடு, அனகாபுத்தூர், கட்டபொம்மன் நகர், ஜமீன் ராய்பேட்டை, பாரதி நகர் பகுதி. அடையார் 4-வது மெயின் ரோடு, கைலாஷ், கஸ்தூரிபாய் நகர் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

ஆவடி, திருமுல்லைவாயல், சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், சித்தாலபாக்கம் மற்றும் போரூர் திருமுடிவாக்கம், மாங்காடு, குன்றத்தூர், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

தாம்பரம் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணிக்கு மேற்கு தாம்பரம் முல்லைநகரில் நடக்கிறது. இதில் பொது மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News