கோப்பு படம்.
குழந்தை இறந்த சம்பவத்தில் திருப்பம் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய் கைது
- தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
- அஜாக்கிரதையாக இருந்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 31). இவரது மனைவி துர்காதேவி (26). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த துர்காதேவி நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் உள்ள உறவினர் பாலு தோட்டத்து வீட்டில் குழந்தையுடன் தங்கினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து வி.ஏ.ஓ. அளித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் பேபி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுத்தையா, ரபீக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் துர்காதேவிக்கும் தோப்புபட்டியை சேர்ந்த அஜய் (21) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது தெரியவந்தது. சம்பவத்தன்று அஜய் மற்றும் துர்காதேவி உல்லாசமாக இருப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அஜாக்கிரதையாக இருந்த தாய் துர்காதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அஜய் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.