உள்ளூர் செய்திகள் (District)

தியாகதுருகம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரி டிரைவர் கைது

Published On 2023-11-01 08:46 GMT   |   Update On 2023-11-01 08:46 GMT
  • லாரியில் மணல் கடத்துவதாக வரஞ்சுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே கூத்தக்குடி மணிமுக்தா ஆற்று பகுதியில் அரசு அனுமதியின்றி லாரியில் மணல் கடத்துவதாக வரஞ்சுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது மணிமுக்தா ஆற்றின் கரைப்பகுதியில் அரசு அனுமதி இன்றி மினி லாரியில் அரை யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News