உள்ளூர் செய்திகள்
காட்டாங்குளத்தூர் அருகே பள்ளியில் அமைச்சர் ஆய்வு
- திதாக கட்டப்பட்டு வரும் ரூ.5.25 கோடி மதிப்பிலான கட்டிடத்தையும் அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.
- மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா உடன் இருந்தனர்.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குமிழி ஊராட்சியி்ல் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார். அப்போது மாணவர் வருகை, வழங்கும் உணவு குறித்து கேட்டறிந்தார்.
மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் ரூ.5.25 கோடி மதிப்பிலான கட்டிடத்தையும் அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைஞர் மோகன், வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா உடன் இருந்தனர்.