உள்ளூர் செய்திகள்

அம்பை அருகே கிராமத்தில் `ஜாலியாக' உலா வரும் கரடிகள்

Published On 2024-07-04 05:56 GMT   |   Update On 2024-07-04 05:56 GMT
  • ஜோடி கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது.
  • மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக உலா வருகிறது.

நெல்லை:

பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு யானை, கரடி, சிறுத்தை, மிளா உள்பட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளது.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள கிராம பகுதியில் புகுந்து அச்சுறுத்துவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாக வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பாபநாசம் அருகே உள்ள கோட்டை விளைப்பட்டி கிராமத்திற்குள் புகுந்து ஜோடி கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது.

அந்த பகுதிகளில் உள்ள மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டுக்கொண்டு ஹாயாக உலா வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் கோட்டை விளைப்பட்டி நடுத்தெருவில் வசித்துவரும் குமார் என்பவரின் வீட்டை சுற்றி 2 கரடிகள் ஜோடியாக சுற்றி திரிந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைத்துள்ளனர். வனத்துறை உடனடியாக கூண்டுவைத்து கரடிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News