உள்ளூர் செய்திகள் (District)
மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளை சந்தித்த விஜய் வசந்த்
- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
- பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.
கன்னியாகுமரி:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக விஜய் வசந்த் சந்தித்தார். அவர்களுக்கு சால்வை அணிவித்தார்.
அப்போது, பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.