உள்ளூர் செய்திகள் (District)

கரும்பு தோட்டத்தில் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்- நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2024-07-06 08:15 GMT   |   Update On 2024-07-06 08:16 GMT
  • தாளவாடி பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.
  • யானையால் 1 ஏக்கர் கரும்பு சேதாரம் ஆனது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சிக்கள்ளி கிராமத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் விவசாயி சங்கர் (30) என்பவர் தோட்டத்தில் புகுந்து கரும்பு பயிரை சேதாரம் செய்தது.

இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகளுடன் யானையை விரட்டினர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப் பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 1 ஏக்கர் கரும்பு சேதாரம் ஆனது.

தொடர்ந்து வன விலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News