உள்ளூர் செய்திகள்

புற்றுக்கோவிலில் சோமவார பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சோமவார பிரதோஷ விழா

Published On 2023-04-18 13:42 IST   |   Update On 2023-04-18 13:42:00 IST
  • கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சோமவார பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கோவில்பட்டி :

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சோமவார பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷம் அதாவது சோமவார பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக் கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும். சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஐதீக வாக்காகும். இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினார்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News