உள்ளூர் செய்திகள்
- மேச்சேரி- ஓமலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக உள்ளார்.
- பங்க் ஊழியர்களிடம் வாலிபர் ஒருவர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, பெட்ரோல் பம்ப் மீது கல்லை கொண்டு எரிந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 53). இவர் மேச்சேரி- ஓமலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக உள்ளார். கடந்த 17-ந்தேதி பங்க் ஊழியர்களிடம் வாலிபர் ஒருவர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, பெட்ரோல் பம்ப் மீது கல்லை கொண்டு எரிந்தார். இது தொடர்பாக வேலாயுதம், மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மேச்சேரி பாரப்பட்டியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 27) என்பவர் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.