உள்ளூர் செய்திகள்

சாலையை கடக்க முயன்ற 4 பேர் பலி- நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-08-11 07:17 GMT   |   Update On 2023-08-11 07:17 GMT
  • சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்.
  • காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

சென்னை:

சென்னை மறைமலைநகர் அருகே பொத்தேரி பகுதியில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணமும் அறிவித்துள்ளார்.

சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News