உள்ளூர் செய்திகள்

தியாகி சங்கரலிங்கனாருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கோரிக்கை

Published On 2023-02-15 10:53 GMT   |   Update On 2023-02-15 10:53 GMT
  • மருதுபாண்டிய சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோருக்கு முழு உருவ சிலையும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபமும் மார்பளவு சிலையும் அமைத்து தியாகிகளை பெருமைப்படுத்தியதை வரவேற்கிறோம்.
  • தியாகி சங்கரலிங்கனாரின் தியாகங்களை போற்றும் வகையில் அவருக்கும் தமிழக அரசு முழு உருவ சிலை அமைத்து பெருமைப்படுத்த வேண்டும்.

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கிண்டி காந்தி மண்டபம் அருகில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுகளை போற்றும் வகையில் மருதுபாண்டிய சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோருக்கு முழு உருவ சிலையும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபமும் மார்பளவு சிலையும் அமைத்து தியாகிகளை பெருமைப்படுத்தியதை வரவேற்கிறோம்.

அதேநேரத்தில் தியாகி சங்கரலிங்கனாரின் தியாகங்களை போற்றும் வகையில் அவருக்கும் தமிழக அரசு முழு உருவ சிலை அமைத்து பெருமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News