உள்ளூர் செய்திகள்
1,008 பால்குட ஊர்வலம் நடந்த காட்சி.
குடியாத்தத்தில் 1008 பால்குட ஊர்வலம்
- சிறப்பு பூஜை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஸ்ரீ தேவி மாசுபட அம்மன் ஆலயத்தில் 58 ஆம் ஆண்டாக 6ஆம் வெள்ளி முன்னிட்டு 1008 பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
பால் குட ஊர்வலத்தை முன்னிட்டு காமாட்சியம்மன் பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 1008 பால் குடங்கள் ஏந்திய பெண்கள் ஊர்வலம் புறப்பட்டு நெல்லூர் பேட்டை ஸ்ரீதேவி மாசுபடா அம்மன் கோவிலை அடைந்தது.
முன்னதாக 1008 பால்குடம் ஊர்வலத்தை நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ஏ.தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.