உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் 41,307 தேர்வர்கள் குரூப்-4 தேர்வை எழுதினர்

Published On 2022-07-24 14:35 IST   |   Update On 2022-07-24 14:35:00 IST
  • 7,180 பேர் தேர்வு எழுத வரவில்லை.
  • தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

வேலூர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 பல்வேறு பதவிகளுக்கான தேர்வு இன்று நடந்தது.

வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி மற்றும் பேரணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

வேலூர் மையத்தில் 65, அணைக்கட்டு 13, குடியாத்தம் 27, கே.வி.குப்பம் 8, காட்பாடி 25, பேர்ணாம்பட்டு 4 தேர்வு கூடங்களில் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டம் முழுவதுமாக 41,307 தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

ஒவ்வொரு தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுத 41,307 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 34,127 பேர் தேர்வு எழுதினர். 7,180 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Tags:    

Similar News