உள்ளூர் செய்திகள்
- சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
- ஏரியில் அவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சின்னஒரப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி பாஞ்சாலை (வயது68). இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஞ்சாலை காலைகடன் கழிப்பதற்காக ேதாட்டத்திற்கு சென்றார். அங்கு உள்ள ஏரியில் அவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கந்தி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.