செய்திகள்

நாளை மாலைக்குள் அதிமுக கூட்டணி முடிவுகள் தெரிந்துவிடும்- அமைச்சர் தங்கமணி

Published On 2019-03-09 08:28 GMT   |   Update On 2019-03-09 08:28 GMT
நாளை மாலைக்குள் அதிமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு முடிவுகள் தெரிந்துவிடும் என அமைச்சர் தங்கமணி நம்பிக்கை தெரிவித்தார். #Thangamani #ADMKAlliance
சென்னை:

பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம்பெற்றுள்ள நிலையில், தேமுதிகவின் வருகைக்காக காத்திருப்பதால் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேமுதிகவின் வருகை குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டு, தொகுதிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.



இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் தங்கமணி, நாளை மாலைக்குள் அதிமுக தலைமையிலான கூட்டணி முடிவுகள் தெரிந்துவிடும் என்றார்.

“அரசியல் காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உண்மையான விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாக போராட்டம் உள்ளது. உயர் மின்கோபுர பிரச்சினை தொடர்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். #Thangamani #ADMKAlliance

Tags:    

Similar News