கதம்பம்

மயில் இறகின் மகத்துவம்!

Published On 2024-06-30 11:15 GMT   |   Update On 2024-06-30 11:15 GMT
  • மயில்கள் அழகு, அன்பு மற்றும் புத்துணர்ச்சியின் அடையாள சின்னம்.
  • வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும்.

மயிலைத் தூய்மை மற்றும் பாசிட்டிவ் சக்தியின் அம்சமாக நம் முன்னோர்கள் கருதினார்கள். மயில் இறகுகள் வீட்டில் இருப்பது சுபமானது. மயில்கள் அழகு, அன்பு மற்றும் புத்துணர்ச்சியின் அடையாள சின்னம். அதிர்ஷ்டத்தை ஈர்க்க, வீட்டில் மயில் இறகுகளை வைப்பார்கள் நம் முன்னோர்கள். மயில் இறகுகள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்கி, நேர்மறை சக்திகளையும் ஈர்க்கிறது.

கிருஷ்ணன் தேய்பிறை ரோகிணியில் பிறந்தார் எனவே அவருக்குரிய பஞ்சபட்சி மயில். அவர் தனது பக்ஷிக்குரிய இறகைத் தலையில் எப்பொழுதும் அணிந்திருப்பார். அதனால் அவர் இறங்கிய செயல்கள் அனைத்திலும் வெற்றியே கண்டார்.

(1) மயில் இறகை வீட்டிலிலோ வீட்டு முகப்பிலோ வைப்பது வாஸ்து தோஷம் மற்றும் திருஷ்டி தோஷத்தைப் போக்கும்.

(2) மயில் தோகையை காயத்துடன் வைத்து கட்டுப் போடா காயம் விரைவில் ஆறும்.

(3) எந்தக் காயத்திக்கும் மயில் இறகைத் தொட்டு தைலம் அல்லது எண்ணெய் போட்டு வர விரைவில் குணமாகும்.

(4) திருஷ்டி தோஷத்திற்கு மந்திரிப்பவர்கள், மயிலிறகினாள் மந்திரித்து, தலை முதல் பாதம் வரை தடவி விடுவார்கள். இதனால் ஒருவர் உடலில் தாக்கங்களை உண்டாக்கியுள்ள திருஷ்டி/ செய்வினை தோஷங்கள் விலகும்.

(5) மயில் தோகையினால் ஆன விசிறிகளை வாங்கி, தினமும் சிறிது நேரம் நமக்கு நாமே வீசிக்கொள்ள, எதிர்மறை சக்திகள் நம்மை விட்டு அகலும்.

வாஸ்து தோஷம் நீங்க:-

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும். அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து "ஓம் சோமாய நமஹ" என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்..

சனி தோஷம் நீங்க:-

சனி தோஷம் நீங்குவதற்கு, மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு "ஓம் சனீஸ்வராய நமஹ" என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும்...

செல்வவளம் அதிகரிக்க:-

அலமாரி நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்...

எதிர்மறை ஆற்றல்கள் நீங்க:-

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்...

அன்யோன்யம் மற்றும் புரிதல் கூட:-

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்...

- சிவசங்கர்

Tags:    

Similar News