செய்திகள்

கார் மீது பஸ் மோதல்: திருப்பதி கோவிலுக்கு வந்த திருச்சி பக்தர்கள் 3 பேர் பலி

Published On 2016-04-10 06:13 GMT   |   Update On 2016-04-10 06:13 GMT
கார் மீது பஸ் மோதல் திருப்பதி கோவிலுக்கு வந்த திருச்சி பக்தர்கள் 3 பேர் பலி, 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

நகரி:

திருச்சி மாவட்டம் பேரமங்கலம் பஞ்சாயத்து மானியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி காரில் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

சனிக்கிழமை காலை திருமலை வந்த அவர்கள் இரவு தரிசனம் முடித்து விட்டு நேற்று காலை திருச்சி திரும்பிக் கொண்டு இருந்தனர். காரில் 9 பேர் பயணம் செய்தனர். ராமசாமி காரை ஓட்டிவந்தார்.

கூட்டலப்பட்டு நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிரே வந்த ஆந்திர அரசு பஸ் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் நசுங்கியது.

காரில் பயணம் செய்த ராமசாமி, ஆனந்த் ஆகியோர் அதே இடத்தில் பலியானார்கள் யுவராணி என்ற பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜ்குமார், பாலகிருஷ்ணா, மகாலட்சுமி, காமேஷ்குமார், மோகனப்பிரியா, மேனகா ஆகியோர் திருப்பதி ரூயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பஸ்சில் வந்தவர்களில் 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Similar News