செய்திகள்

ஆலப்புழாவில் இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மி‌ஷம்: கம்யூனிஸ்டு நிர்வாகி கைது

Published On 2017-02-01 05:10 GMT   |   Update On 2017-02-01 05:10 GMT
ஆலப்புழாவில் நடுரோட்டில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து செக்ஸ் சில்மி‌ஷம் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா நெடுமுடியைச் சேர்ந்தவர் ராஜீவ், (வயது 30). கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியான இவர், மோட்டார் சைக்கிளில் முல்லைக்கல் என்ற இடத்தில் சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வங்காள தேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தனியாக நடந்து சென்றார்.

அந்த பெண்ணை கட்டிப் பிடித்து ராஜீவ் முத்தம் கொடுத்து செக்ஸ் சில்மி‌ஷம் செய்துள்ளார். அந்த பெண் கூச்சல் போட்டதும் அவர், தப்பியோடி விட்டார். இதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சி மூலம் ராஜீவை அடையாளம் கண்டு அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News