செய்திகள்

காஷ்மீர்: ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் ஆவேச தாக்குதல்

Published On 2017-04-17 05:04 GMT   |   Update On 2017-04-17 05:04 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



இன்று காலை சுமார் 8 மணியில் இருந்து அதிநவீன தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக கைத்துப்பாக்கிகளால் இங்குள்ள இந்திய நிலைகளின்மீது ஆவேச தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய 15 நாட்களில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தியுள்ள ஆறாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News