செய்திகள்

மது குடிப்பதாக கூறிய எம்.எல்.ஏ. குற்றச்சாட்டுக்கு ஹேமமாலினி பதில்

Published On 2017-04-17 10:44 GMT   |   Update On 2017-04-17 10:45 GMT
தினமும் மது குடிப்பதாக கூறிய எம்.எல்.ஏ. குற்றச்சாட்டுக்கு ஹேமமாலினி பதில் அளித்துள்ளார்.

மும்பை:

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. பச்சுகாது.

இந்த எம்.எல்.ஏ., நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு மது அருந்துவது காரணம் என்று சொல்லுகிறார்கள். அதை நான் ஏற்க மாட்டேன்.

நடிகை ஹேமமாலினி கூட தினமும் மது அருந்துகிறார். அவர் என்ன தற்கொலையா செய்து கொண்டார்?” என்று குறிப்பிட்டார்.

பா.ஜனதா எம்.பி.யும், பிரபல இந்தி நடிகையுமான ஹேமமாலினியை சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர் வம்புக்கு இழுத்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஹேமமாலினி எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ. பச்சுகாதுவின் பேச்சு குறித்து நடிகை ஹேமமாலினியிடம் கேட்ட போது அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

யாரோ ஒருவர் பேசியது பற்றி கருத்து சொல்லி நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை. தகுதியே இல்லாத வி‌ஷயம் அது.

எனவே, அது பற்றி கருத்து சொல்ல வேண்டுமா என்றுதான் அமைதியாக இருக்கிறேன். அவருக்கு விளம்பரம் தேவைப்படுவதால் குறுக்கு வழியை தேர்வு செய்து இருக்கிறார். கடவுள் ஆசீர் வதிக்கட்டும்.

இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.

Similar News