செய்திகள்

யமுனோத்ரிக்கு யாத்திரை சென்ற தெலுங்கானா பெண் உயிரிழப்பு

Published On 2018-06-16 11:53 GMT   |   Update On 2018-06-16 11:53 GMT
இமயமலையில் உள்ள யமுனோத்ரிக்கு யாத்திரை சென்ற தெலுங்கானாவை சேர்ந்த பெண் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.
டேராடூன் :

யமுனை நதியின் பிறப்பிடமான யமுனோத்ரி இமயமலையின் மீது அமைந்துள்ளது. வழிபாட்டு தளமாக விளங்கும் யமுனோத்ரிக்கு யாத்திரை சென்ற சுலோச்சனா(60) என்ற பெண் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்தார். 

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உயிரிழந்த பெண் தெலுங்கானா மாநிலம் அகமதுகுடா பகுதியை சேர்ந்தவர். ஜான்கி சட்டியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்’ என தெரிவித்தார். 
Tags:    

Similar News