இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2024-08-29 05:52 GMT   |   Update On 2024-08-29 05:52 GMT
  • மூன்று இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக வீரர்கள் துப்பாக்கிச்சண்டை.
  • இரண்டு இடங்களில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார் உடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தேடுதல் வேட்டை நடைபெற்றது. குப்வாரா மாவட்டத்தின் மச்சல் என்ற இடத்தில் சந்கேத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதை கண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

அதேபோல் குப்வாரா மாவட்டத்தின் டங்தார் என்ற இடத்திலும் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்றது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார்.

மேலும் ரஜோரி மாவட்டத்தின் லத்தி என்ற பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த மூன்று என்கவுண்டரிலும் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News