இந்தியா

மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை

Published On 2024-07-23 09:21 GMT   |   Update On 2024-07-23 09:21 GMT
  • பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
  • தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

மத்திய பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:-

* தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆகவும், வைரத்திற்கு 6.4 சதவீதம் ஆகவும் குறைக்கப்படுகிறது. பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சத வீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

* பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.

* நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

* வருமான வரி செலுத்து வோரிடம் 3-ல் 2 பங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.

* ஆன்லைன் வர்த்தகத் திற்கான டி.டி.எஸ். வரி குறைக்கப்படுகிறது. டி.டி.எஸ். தாக்கல் தாமதம் ஆவது இனி கிரிமினல் குற்றமல்ல.

* குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீத குறுகிய மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.

* 2 முறையாக இருந்த வரி செலுத்துவது ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே முறையாக மாற்றப்படும்.

* வெளிநாடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 40 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக வரி குறைக்கப்படும்.

* உற்பத்தி துறையில் 5 ஆண்டுகளில் 1 கோடி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தரப்படும்.

* மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை தரப்படும்.

* 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

* நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கான புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப் படும். தீர்ப்பாயம் அமைக் கப்படுவதால் ஏராளமான வழக்குகள் தீர்த்து வைக் கப்படும்.

* நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகள் கட்டப்படும்.

* நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மகளிர் சார்ந்த திட்டங்க ளுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும்.

* 4.1 கோடி இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News