இந்தியா

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு

Published On 2025-03-01 10:08 IST   |   Update On 2025-03-01 11:04:00 IST
  • 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • உயிரிழந்தவர்களில் இருவர் பொறியாளர்கள், 6 பேர் தொழிலாளர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

இதன் சுரங்கப்பாதை பணிக்காக இருபுறமும் இருந்து துளையிடும் எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கடந்த வாரம் ஏற்பட்ட மண் சரிவில் 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர்.

சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய மற்ற 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி மரணம் அடைந்தது உறுதியாகி உள்ளது

தெலங்கானாவில் சுரங்கம் அமைக்கும் பணியில் மண் சரிவில் சிக்கிய 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் பொறியாளர்கள், 6 பேர் தொழிலாளர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News