இந்தியா

ராகுல் காந்திக்கு வரவேற்பு அளித்த காங்கிரஸ் கட்சி

ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை மகாராஷ்டிராவில் நுழைந்தது

Published On 2022-11-07 20:14 GMT   |   Update On 2022-11-07 20:14 GMT
  • மகாராஷ்டிராவில் 20-ம் தேதி வரை ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
  • 14 நாட்கள் யாத்திரையில் ராகுல் காந்தி 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.

மும்பை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் தெலுங்கானா சென்றார்.

தெலுங்கானாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை கடந்த 24-ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் அங்கு அவரது யாத்திரை நிறைவு பெற்றது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தது. இரவில் அவரது பாத யாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

மகாராஷ்டிராவில் இன்று காலை 8.30 மணியில் இருந்து ராகுல் காந்தி பாத யாத்திரை தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை அவர் மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்குச் செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார்.

மகாராஷ்டிராவில் 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். முதல் பொதுக்கூட்டம் வரும் 10-ம் தேதி நான்டெட் மாவட்டத்திலும், 2-வது பொதுக்கூட்டம் 18-ம் தேதி புல்தானா மாவட்டம் சென்காவ் பகுதியிலும் நடக்கிறது.

ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் முடிந்த பிறகு ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்துக்கு 20-ம் தேதி செல்கிறது.

Tags:    

Similar News