வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு பட்ஜெட்டில் இந்தியா ஒதுக்கிய நிதி எவ்வளவு?
- வெளியுறவுத்துறைக்கு மொத்தமாக ரூ.20,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இரண்டாவதாக நேபாளத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை சுற்றியுள்ள இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வெளியுறவுத்துறைக்கு மொத்தமாக ரூ.20,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில் ரூ.5,483 கோடி பிற நாடுகளுக்கு உதவிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு உதவி செய்ய மத்திய அரசு சார்பில் ரூ.5,806 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த தொகை குறைந்துள்ளது.
2025-26 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டில் அண்டை நாடான பூடானுக்கு அதிகபட்சமாக ரூ.2,150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக நேபாளத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மாலத்தீவுக்கு ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.600 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக இலங்கைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த வருடத்தை போலவே இந்த ஆண்டில் வங்கதேசத்துக்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.